பரதநாட்டியம்:

·         இந்திய நாட்டியங்களுள் முதன்மையானது.

·         பரத முனிவர் இதனை முதன் முதலில் தொகுத்து வழங்கியதால் இது தமிழ்நாட்டிற்கு உரிய நாட்டிய கலையே.

·         தஞ்சையில் தோன்றிய கலை இது.

·         மற்ற இந்திய வகை நடனங்களுக்கு இதுவே தாய்.

சாக்கியார் கூத்து:

·         கேரளாவில் உள்ள சாக்கியர் சமூகத்தால் ஆடப்படும் கூத்து.

·         இது கோயில் வளாகங்களுக்கு உள்ளேயே ஆடப்படுகிறது.

·         உயர்வகுப்பினர் இதன் ரசிகர்கள்.

·         இதன் நாடகசாலை கூத்தம்பலம் எனப்படும்.

·         இது கேரளாவில் குடியேறிய ஆரியர்களால் கொண்டுவரப்பட்டது என்பர். ஆனால் உண்மையில் தமிழ்நாட்டில் இருந்தே சென்றிருக்க வேண்டும். தமிழ் தொன்மையான கூத்துகளில் சாக்கை கூத்தும் ஒன்று.

·         இது நாடக பாணியிலான ஒரு வகை நடனம்.

·         கையசைப்பும் முகபாவமுமே முதன்மையாக கொண்டு நிகழ்த்தப்படும்.

·         கிண்ணாரமும் முழவு எனப்படும் மேளமுமே இதன் இசைக்கருவிகள்

கதக்:

·         இதனுடைய வேர்ச்சொல் கதையாகும். எனவே கதையம்சம் உள்ள நாட்டியம்  கதக் எனப்பட்டது.

·         கதக் நடனத்தின் சிறப்பு அதன் வேகமும் பாதப்பணிகளும் ஆகும்.

·         உடையலங்காரமும் அங்கச் செழிப்பை வெளிபடுத்துவதாக இருக்கும்.

கதகளி:

·         கேரளத்தின் ஆதியுன்னத சாஸ்திரீய நுண்மையும் திட்டமும் வாய்ந்த கலை.

·         இது கலைஞனின் ஒவ்வொரு நரம்பணுவையும் அதிர வைக்கும் தேர்ந்த பயிற்சியை அடிப்படையாக கொண்டது.

·         இதன் கருக்கள் இராமாயண, மகாபாரத இதிகாச காட்சிகளை அடியொட்டியவை.

·         இவை சமஸ்கிருதமாக்கப்பட்ட மலையாளத்தில் எழுதப்படும்.

·         உடையலங்காரங்கள், ஆபரணங்கள், மற்றும் முக பாவனைகள் இவற்றில் முக்கிய இடம் பெறுகின்றன.

·         வண்ணங்களே குணாதியசத்தையும் பாத்திரப் படைப்பையும் வெளிக்காட்டும்.

·         கேரள கலாமண்டலம் கதகளியின் வளர்ச்சிக்கு பாடுப்பட்டு கதகளியை அழியாமல் காத்து வருகிறது.

கிருஷ்ணனாட்டம்:

கிருஷ்ணனின் வரலாற்றை எட்டு இரவுகளில் விவரிப்பது. இது கதகளியை போன்றே இருக்கும்.

ஓட்டம் துள்ளல்:

·         இதுவும் கேரள வகை நாட்டியமே. இது பொதுமக்கள் கலையாகும். இதன் பாடல்களில் தமிழ் வாடையே வீசும்.

·         இதை ஏழையின் கதகளி என்பர் குஞ்சன் நம்பியார் இதன் வளர்ச்சிக்கு வித்திட்டவர்.

·         சமூக பிரச்சனையையும் சாதி வகுப்புப் பாகுபாட்டு கொடுமைகளையும் சித்தரிக்கும் எளிய மொழியாகையால் மக்களை கவர்ந்திழுக்கும் ஆடல் இது.

மோகினியாட்டம்:

·         விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை மயக்கிய வரலாறு இதன் கரு.

·         இதுவும் கேரள வகை நாட்டியம் ஆகும்.

·         இது 16-ம் நூற்றாண்டில் பிரபலமாகியது.

·         இதில் உடையலங்காரம் கருத்தை கவரும் விதத்தில் அமைந்திருக்கும்.

குச்சிப்புடி:

·         இது ஆந்திரப்பிரதேச நாட்டிய நாடகம்.

·         இது தமிழ்நாட்டு பாகவத மேளாவை ஒத்திருப்பது.

·         இதன் இலக்கணம் நாட்டிய சாஸ்திரத்திற்குரியது. இது உடல் இயக்க அசைவுகளை அடிப்படையாக கொண்டது. பிற விஷயங்களில் பரதநாட்டியத்தையே பின்பற்றுகிறது.

·         தீர்த்த நாராயணரும் சித்தேந்திர யோகியும் இந்த பாணியை வளர்த்தார்கள்.

·         ஆந்திராவில் உள்ள குச்சிப்புடி என்ற இடமே இதன் தாயகம்.

மணிபுரி நடனம்:

·         மணிபுரியில் 15 முதல் 18 –ம் நூற்றாண்டு வரை வைணவம் பரவியது. இதன் பாதிப்பால் ஏற்பட்ட நடனமே மணிபுரி நடனம்.

·         ‘லால்ஹரோபா’, ‘ராஸலீலா’ இவையே இதன் கருவாக அமைகின்றன.

·         ‘லால்ஹரோபா’ உலக படைப்பையும் ‘ராஸலீலா’ கிருஷ்ணனின் லீலைகளையும் அடிப்படையாக கொண்டது.

·         இவ்வகை நடனத்தில் மேளமும் ஜால்ராவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஒடிஸி நடனம்:

·         இது ஒரியாவை சேர்ந்த நாட்டியம் ஆகும். இதுவும் நாட்டிய சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டதே.

·         சமண மன்னனாகிய காரவேலன் இவ்வகை நடனத்தில் தாண்டவம் ஆடுவதிலும் அபிநயம் பிடிப்பதிலும் சிறந்தவர்

·         கரணங்களும் அடிப்படை பாவங்களும் இதற்கு முக்கியமானவை.

·         பூமி நமஸ்காரம், பாட்டு, பல்லவி, அஷ்டபதி இவையே இதன் முறையாக இருக்கும்.

·         இறுதியில் ஆடப்படும் ‘மோக்ஷா’ தில்லானாவை ஒத்திருக்கும்.

யக்ஷகானம்:

·         இது கர்நாடகத்திற்கு உரிய நடனம்.

·         இது கிராமிய கலையாக அங்கு போற்றப்படுகிறது.

·         இது நாட்டியம், நாடகம் இரண்டும் கலந்தது.

·         இதன் அடிப்படை கானா எனப்படும் பாட்டாகும்.

·         புராண இதிகாசங்களே இதன் கரு.

·         ‘சூத்திரக்காளி’ எனப்படும் நாடகம் நடத்துவோரும் ‘விதூஷகள்’ எனப்படும் கோமாளியும் உண்டு.

கிராமிய நடனங்கள்:

 இந்தியாவெங்கும் கிராமங்கள் தோறும் கரகம், கோலாட்டம், கும்பி, ஒயிலாட்டம், மயிலாட்டம், புவியாட்டம், தெருக்கூத்து போன்ற பல்வகை நடனங்களும் நாட்டியங்களும் உண்டு.


 
Top