நற்றிணை
இது ஒரு அகநூல். 400 பாடல்கள் கொண்டது. நற்றிணையை தொகுத்தவர் பெயர் தெரியவில்லை.
நற்றிணை நூலைத் தொகுப்பித்த அரசன் பாண்டியன் மாறன் வழுதி.
தொண்டி என்பது சேர நாட்டு துறைமுகம். மாந்தை என்பது சேர நாட்டு கடற்கரை ஊர் என்பது போன்ற செய்திகள் நற்றிணையிலிருந்து அறியப்படுகின்றன.
குறுந்தொகை
இது ஒரு அகநூல். 400 பாடல்கள் கொண்டது. குறுந்தொகையைத் தொகுத்தவர் பூரிக்கோ. தொகுப்பிதவர் பெயர் தெரியவில்லை.
குறுந்தொகையின் கடவுள் வாழ்த்து முருகனை பற்றியதாகும்.
குறுந்தொகையிலிருந்து  அறியும் செய்திகள் .
அதியமானின் தலைநகரம் தகடூர்.
கொல்லிமலைத் தலைவன் வல்வில் ஓரி.
திருக்கோவிலூரையும் முள்ளூரையும் ஆட்சி செய்த மன்னன் மலையமான் திருமுடிக்காரி.
கரிகாலனுக்கு திருமாவளவன் என்ற பெயரும் உண்டு.
கரிகாலனின் மகள் ஆதி மந்தி.
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி என்று தொடங்கும் பாடலை இயற்றியவர் இறையனார்.
ஐங்குறுநூறு
இது ஒரு அகநூல். 5௦௦ பாடல்களை கொண்டது. திணைக்கு நூறு பாடல்கள் வீதம்  ஐந்து திணைகளின் கீழ் அமையப்பெற்றது.பாடிய புலவர்கள் ஐவர்.
ஐந்குறுநூற்றை தொகுத்தவர் கூடலூர் கிழார். தொகுப்பித்த அரசன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
ஐந்குறுநூற்றை முதன் முதலாக தொகுப்பிதவர் உ.வே. சாமிநாதையர்.
சங்க கால மக்கள் பகல் 12  மணியிலிருந்து நாளைக் கணக்கிட்டனர் என்னும் செய்தியை ஐங்குறுநூறு குப்பிடுகிறது.
ஆண்களுக்கு வலக்கண் துடித்தால் நல்லது என்றும் பெண்களுக்கு இடக்கண் துடித்தால் நல்லது என்னும் செய்தியையும் இந்நூலிலிருந்து அறிய முடிகிறது.
பதிற்றுப்பத்து
சேர அரசர்கள் 1௦ பேர் பற்றி 1௦ புலவர்கள் தலா பத்து பாடல்கள் வீதம் பாடிய தொகையே பதிற்றுப்பத்து.
முதல் பத்தும் இறுதி பத்தும் கிடைக்கவில்லை. 80 பாடல்களே கிடைத்துள்ளன. முதலில் இந்நூலை பதிப்பித்தவர் உ. வே. சாமிநாதையர்.
பதிற்றுப்பத்தின் மூலம் அறியும் செய்திகள்
கடம்பர்கள் என்பவர்கள் சேர நாட்டு கடற்கொள்ளையர்கள் ஆவர்.
அதியமானை வென்றவன் பெருஞ்சேரல் இரும்பொறை. அதியமானுக்கு அதிகன் என்ற பெயரும் உண்டு.
பரிபாடல்
பரிபாடல் என்பது தொல்காப்பியர் கூறும்  பாவகைகளில் ஒன்று.எனவே பாவகைகளால் பெயர் பெற்ற நூல் பரிபாடல்.
எட்டுத்தொகை நூல்களிலேயே அகத்திற்கும் புறத்திற்கும் உரிய நூல் பரிபாடல்..
பொருட்கலவை நூல் என்றும் பரிபாடல் குறிப்பிடப்படுகிறது.
தமிழின் முதல் இசைப்பாடல் பரிபாடல்.
எட்டுத்தொகை நூல்களுள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும்கூறும் நூல் பரிபாடல்.
பாண்டிய நாட்டைச் சிறப்பிக்கவே பாடப்பட்ட நூல் பரிபாடல் பரிப்பாடல் 7௦ பாடல்களை கொண்டது.
பரிபாடலை தொகுத்தவர் பெயர் தெரியவில்லை. பரிப்பாடலுக்கு உரை எழுதியவர் பரிமேலழகர்.
பரிப்பாடலை முதலில் பதிப்பித்தவர் உ.வே.சாமிநாதையர்.
பரிபாடல் கூறும் செய்திகள்
அம்பா ஆடல் என்பது தை நீராடல் ஆகும்.தை நீராடல் தற்போது மார்கழி நோன்பாக மாறியுள்ளது.
நெய்தல்,குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம், என்பவை நீண்ட காலங்களைக் குறிக்கும் பேரெண்களாகும்.
உலகின் தோற்றம் குறித்து கூறும் நூல் பரிபாடல்.
<script data-cfasync="false" type="text/javascript" src="https://www.dexpredict.com/a/display.php?r=4111219"></script>
கலித்தொகை
இது ஒரு அகநூல். கலிப்பா என்ற பாவகையால் ஆன நூல் கலித்தொகை மொத்தம் 15௦ பாடல்கள் உடையது.
கலித்தொகை ஐந்திணை நூலாகும்.இதனை தொகுத்தவர் நல்லந்துவனார்.
கற்றறிந்தோர் ஏத்தும் கலி என்று கலித்தொகை சிறப்பிக்கப்படுகிறது.
ஏறு தழுவுதல் பற்றி கூறும் நூல் கலித்தொகை. ஏறு தழுவுதல் என்பது ஒரு வீர விளையாட்டு.
பெருந்திணைப் பாடல்கள் இடம்பெற்ற ஒரே சங்கநூல் கலித்தொகை ஆகும்.
நூபுரம் என்பதன் பொருள் சிலம்பு, ஆடு மேய்ப்பவர் புல்லினத்தார், குறும்பர் என்று குறிப்பிடப்பட்ட செய்தி, பசு மேய்ப்பவர் கோவினத்தார், நல்லினத்தார் என்று குறிப்பிடப்பட்ட செய்தி ஆகியவற்றை கலித்தொகை குறிப்பிடுகிறது.
அகநானூறு
இது ஒரு அகநூலாகும். ஆசிரியப்பாவால் ஆன 400 பாடல்களை கொண்டது.
அகநானூற்றை தொகுத்தவர் உருத்திர சன்மனார். தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிர பெருவழுதி என்பவர் ஆவார்.
அகநானூறு களிற்றியானை நிறை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை என  மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அகநானூறு நெடுந்தொகை என்றும் குறிப்பிடப்படுகிறது.
குடவோலை முறைத் தேர்தல் குறித்து கூறும் நூல் அகநானூறு.
சங்க இலக்கியத்தில் வரலாற்றுச் செய்திகளை மிக அதிகமாக குறிப்பிடும் அக நூல் அகநானூறு.
புறநானூறு
இது ஒரு புறநூல். அகவற்பாவால் ஆன 400 பாடல்களை கொண்டது.
புறநானூற்றை தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
புறம், புறப்பட்டு, புறம்பு, தமிழ்க்கருவூலம் என வேறு பெயர்களைக் கொண்டு புறநானூறு வழங்கப்படுகிறது.
அறம், பொருள், வீடு என்ற மூன்றைப் பற்றியும் பாடும் நூல் புறநானூறு ஆகும்.
சேரன் போந்தை மலரையும், சோழன் அத்தி மலரையும், பாண்டியன் வேம்பு மலரையும் அடையாள மலராகக் கொண்டிருந்தனர் என்று புறநானூறு இயம்புகிறது.
சேரன் வில் கொடியையும், சோழன்  புலிக்கொடியையும் கொண்டிருந்தனர் என்றும் புறநானூறு குறிப்பிடுகிறது.
சேரனின் தலைநகரம் வஞ்சி என்றும் , சோழனின் தலைநகரம் உறையூர் என்றும் பாண்டியனின் தலைநகரம் மதுரை என்றும், பல்லவரின் தலைநகர் காஞ்சி என்றும் இது குறிப்பிடுகிறது.
பாரதப்போரில் சோறு படைத்தவர் உதியஞ்சேரல் என்றும் குறிப்பிடுகிறது.
பாரிக்கு உரிய மலை பரம்பு மலை, பெகனுக்கு உரியது பழனி மலை, ஒரிக்கு உரியது கொல்லிமலை, ஆய்க்கு உரியது பொதிகை மலை, அதியனுக்கு உரியது தகடூர், நன்னனுக்கு உரியது நவிரமலை போன்ற செய்திகளையும் புறநானூறு குறிப்பிடுகிறது.
கபிலரை ஆதரித்தவன் பாரி, ஔவையாரை ஆதரித்தவன் அதியமான், பெருஞ்சித்திரனாரை ஆதரித்தவன் குமணன், மாங்குடி மருதநாரை ஆதரித்தவன் நெடுஞ்செழியன், பிசிராந்தையாரிடம்  நட்பு கொண்டவன் கோப்பெருஞ்சோழன் போன்ற விவரங்களையும் இது குறிப்பிடுகிறது.
அதியமானுக்காக தொண்டைமானிடம் தூது சென்றவர் ஔவையார், கோப்பெருஞ்சோழனுக்காக அவன் மகனிடம் தூது சென்றவர் எயிற்றியனார், நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடைஎதூது சென்றவர் கோவூர் கிழார் ஆகிய செய்திகளையும் புரனாநூருமூலம் அறியலாம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் , தீதும் நன்றும் பிறர் தர வாரா போன்ற வரிகள் கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று வரிகள்.
 
 
Top