ஈரோடு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-4, தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணி, தமிழ்நாடு நில அளவை மற்றும் நில பதிவேடுகள் சார் நிலைப்பணி உட்பட, 9,351 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக, தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், டிச.,18 முதல், பிப்.,8 வரை, ஈரோடு மற்றும் சத்தியமங்கலம் ஆகிய இடங்களில், இலவச பயிற்சி வகுப்பு நடத்துகிறது. 

பங்கேற்போர், தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், கல்விச்சான்று, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வேலை வாய்ப்பு அடையாள அட்டை நகல்கள், இரண்டு மார்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் , மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  டிச.,15க்குள் பதிவு செய்ய வேண்டும்.
 
Top