தமிழகத்தில் காலியாக உள்ள, துணை
கலெக்டர், 29; டி.எஸ்.பி., 34; வணிக வரி
கமிஷனர், எட்டு; மாவட்ட பதிவாளர், ஒன்று; மாவட்ட
வேலைவாய்ப்பு அதிகாரி, ஐந்து மற்றும் மாவட்ட தீயணைப்பு அதிகாரி,
எட்டு
என, மொத்தம், 85 இடங்களுக்கு, குரூப் - 1
முதல்நிலை
எழுத்துத் தேர்வு, பிப்., 19ல் நடந்தது.
இதன் முடிவுகளை, ஜூலை, 21ல்,
டி.என்.பி.எஸ்.சி.,
வெளியிட்டது.
அதன்படி, முதன்மை எழுத்துத் தேர்வுக்கு, 4,602 பேர் தேர்வு
செய்யப்பட்டனர்.
’முதன்மை எழுத்துத் தேர்வு, அக்.,
13 - 15 வரை, காலை, 10.00 மணி முதல்,
பகல்,
1.00மணி
வரை நடக்கிறது. மேலும் விபரங்களை, www.tnpsc.gov.in
என்ற
இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்’ என, தேர்வு
கட்டுப்பாட்டு அதிகாரி, ஷோபனா அறிவித்து உள்ளார்.