சென்னை: விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவ., 9ம் தேதி சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து TNPSC வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலைப் பணியில் அடங்கிய விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு 20.05.2017 மு.ப. - பி.ப. அன்று நடத்தப்பட்டது. அதில், மொத்தம் 1779 தேர்வர்கள் பங்கேற்றனர். 


விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 54 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல்-II தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 09.11.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்




 
Top