1.       மதுரையில் உள்ள யானைப்போர் காண்பதற்கான திடல் எது? தமுக்கம் மைதானம்


2.       ‘குழந்தை இலக்கியம்’ என்னும் பாடல் தொகுப்பில் ‘மெய்ப்பொருள் கல்வி’ என்னும் தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ள பாடலை இயற்றியவர் யார்? வாணிதாசன்


3.       “வெறுங்கை என்பது மூடத்தனம் .........” என்னும் பாடலின் ஆசிரியர் யார்? தாராபாரதி


4.       சென்னை எழும்பூரில் அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? கி.பி.1851


5.       “தன்னாட்டு பொருள் இயக்கமான சுதேசி இயக்கத்தை வளர்க்கும் கடமை இளைஞர்களுக்கே உரியது” என்று கூறியவர் யார்? மகாத்மா காந்தி


6.       நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களை கொண்டுள்ள நூல் எது? சிறுபஞ்சமூலம்

7.       கலித்தொகையில் உள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை (கடவுள் வாழ்த்து உட்பட)? 150

8.       உலகத்தின் இயல்பினை உள்ளதை உள்ளவாறே புனைந்து காட்டுவது எது? நாடகத்தமிழ்

9.       ---------- என்பது விலங்குப் பொதுப்பெயராகவும் குதிரை பெயராகவும் உள்ளது? மா

10.   சங்க இலக்கியத்துள் ‘உள்ளுறையும் இறைச்சியும்’ மிகுதியாக இடம்பெற்றுள்ள நூல் எது? ஐங்குறுநூறு
 
Top