Rukmini devi  

பிறப்பு :29.02. 1904
பிறந்த ஊர் :மதுரை
பெற்றோர் :நீலகண்ட சாஸ்திரி - சேஷம்மாள்
கணவர் :ஜார்ஜ் சிட்னி அருண்டேல்
இறப்பு :24.02.1986

ருக்மிணி தேவி அருண்டேல் ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞர்.

கலாசேத்திரா என்ற நடனப் பள்ளியினை நிறுவியவர்.

சமூகத்தில் ஒரு சாரார் மட்டும் பயின்ற சதிர் என்ற நடனத்திற்கு,  பரதநாட்டியம் என்ற பெயரிட்டு  பலரும் பரவலாக பயில முனைப்புடன்  செயல்பட்டவர்.

அன்னி பெஸண்ட்  துவக்கிய  தியசோஃபிக்கல்  சொஸைட்டியில்  ஈடுபாடு  கொண்டவராக  இருந்தார்.  

தியசோஃபிக்கல்  சொஸைட்டியில் நடைபெறும் ஆண்டுவிழாக்களில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ருக்மிணி, ரவீந்திரநாத் தாகூர்  எழுதிய மாலினி  என்ற  நாடகத்தில்  நடித்தார். மேலும் ஒரு பாடலும்  பாடினார். இதைப் பார்த்த அவர் தந்தை இசை பயில ஊக்கப்படுத்தினார். ருக்மிணி, கிரேக்க நடனமும் கற்றுக் கொண்டார்.

1920ஆம் ஆண்டில்,  ஜார்ஜ்  சிட்னி  அருண்டேல் என்பவரை  இங்கிலாந்தில் இருந்து  கல்வி  மற்றும்  இதர பணிகளில் தனக்கு உதவி புரிவதற்காக, அன்னி பெஸண்ட் அழைத்தார்.

அன்னி பெஸண்ட் அளித்த தேநீர் விருந்தில் ஜார்ஜ் அருண்டேலும், ருக்மிணியும் கலந்து கொண்டனர். இருவரும் ஈர்க்கப்பட்டு, அன்னி பெஸண்ட்டின் அனுமதியோடு, ருக்மிணியின் பதினாறாம் வயதில் திருமணம் செய்து கொண்டனர்.

இத்திருமணம் அக்காலக் கட்டத்தில் ருக்மிணியின் உறவினர்களிடையே ஒரு பெரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியது .

ருக்மிணி, ஜார்ஜுடன் ஐரோப்பாவிற்கு பயணம் சென்றார். அங்கு இசை, சிற்பம், ஆப்பரா, பாலேமுதலிய பல கலைகளுக்கு அறிமுகமானார்.

1933ஆம் ஆண்டில், கிருஷ்ண அய்யர்,  சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியில், ஒரு தேவதாசி சதிர் நிகழ்ச்சிக்கு  ஏற்பாடு  செய்திருந்தார். அதைக் காண ருக்மிணியை அழைத்திருந்தார். அந்த தேவதாசிகளின் சதிர் ஆட்டத்தினால் ஈர்க்கப்பட்டார். அக்கலையினை கற்றுக்கொள்வதற்கு பலதடைகள் எழுந்தாலும், சதிர் ஆட்டத்தினை கற்க வேண்டும் என்று தீர்மானித்தார்.

அக்காலத்தில் புகழ்பெற்ற  தேவதாசியான, மயிலாப்பூர் கௌரி அம்மா என்றவரிடம்  தனியாகக்  கற்க  ஆரம்பித்தார். இதற்கு ருக்மிணியின் கணவரான அருண்டேலும், அன்னையும், தமையன்களும் உறுதுணையாக இருந்தனர். முதலில் கௌரி அம்மாவிடமும், பிறகு பந்தநல்லூர் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை என்பவரிடம் நடனம் பயின்றார்  ருக்மிணி.

நாட்டியத்தில் நன்றாக பயிற்சி பெற்று, 1935ஆம்ஆண்டு, தியசோஃபிக்கல் சொஸைட்டியின் வைர விழாக் கொண்டாட்டத்தின் போது, அரங்கேற்றம் செய்தார்.  பலரும் இவருடைய நடனத்தினைப் பாராட்டினர். ருக்மிணியின் நடனம் அழகியல் மற்றும் ஆன்மீகத் தன்மை நிறைந்ததாகக் கருதப்பட்டது.

உலகின் சிறந்த அனைத்துக் கலைக்களுக்கும் இணையானது இந்தியாவின் சதிர் என்ற அறிந்து, அதற்கு பரதநாட்டியம் என்ற பெயரினை சூட்டினார். 

சதிர் என்ற பரதநாட்டியம், சமூகத்தில் உள்ள பலரும் பயில வேண்டிய ஒன்று என்பதில் திண்ணமாக இருந்தார், ருக்மிணி. இதற்காக, கலாக்ஷேத்ரா என்ற கலைப் பள்ளியினை தோற்றுவித்தார். இங்குள்ள மாணவர்களுக்கு பயில சிறந்த இசைக்கலைஞர்களையும், நாட்டியக் கலைஞர்களையும் அழைத்தார்.

ருக்மிணி, விலங்குகள் மீது தீவிர அன்பினைக் கொண்டிருந்தார். இந்திய பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்த போது, விலங்கு வதை சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றினார்.

1977ஆம்ஆண்டில், அப்போதைய பிரதமர் மொரார்ஜி  தேசாய், ருக்மிணியை குடியரசுத் தலைவர்  பதவியினை வகிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

கலை மற்றும் கலைசார்ந்தவற்றிற்காக பணிபுரிவதே தன் விருப்பம் என்று கூறி அப்பதவியினை ஏற்க மறுத்தார்.

1986ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 24ஆம் தேதி, ருக்மிணி இறந்தார். அதன் பிறகு, அவர் துவக்கிவைத்த கலாக்ஷேத்ரா தேசிய சிறப்பு வாய்ந்த நிறுவனமாக பாராளுமன்றத்தினால் அறிவிக்கப்பட்டது.

நெசவு

ருக்மிணி, இந்தியாவின் பாரம்பரியக் கலைகளில் முழுமையான ஆர்வம் கொண்டிருந்தார்.

1937ஆம் ஆண்டில் இந்திய அரசின் உதவியோடு, நலிவடைந்திருந்த நெசவுத் தொழிலினை, ஊக்குவிக்கும் பொருட்டு, சில நெசவு ஆலைகளை நிறுவினார்.

பல்வேறு வகைகளிலும், கண்கவர் வண்ணங்களிலும், அழகான வேலைப்பாடுகளுடைய கைத்தறி ஆடைகளை இந்த ஆலை தயாரித்தது. கமலாதேவி சட்டொபத்யாயவின்உதவியோடு, துணிகளுக்கு இயற்கையான சாயங்களை பயன்படுத்தும் முறையினை பயின்றார். அதோடு இல்லாமல் கலம்கரி என்ற துணிகளில், சாயம் கொண்டு வேலைப்பாடு செய்யும் முறைகளையும் ஊக்குவித்தார்

பத்ம பூஷண்விருது, காளிதாஸ் சம்மான் விருது, சங்கீத நாடக அகாடமி விருது  போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்..

 
Top