இந்தியாவின் முக்கிய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி பற்றி சில தகவல்கள்:

1935 -ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி  நிறுவப்பட்டது.

இந்தியா  ரிசர்வ் வங்கியை தன்வயப்படுத்திக்கொண்ட ஆண்டு 1949.

இந்திய ரிசர்வ் வங்கி  - இந்தியாவின் மத்திய வங்கி எனப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி -  இந்திய அரசாங்கத்தின் வங்கியாக செயல்படுகிறது.

வங்கிகளின் வங்கியாக செயல்படுவதும் இந்திய ரிசர்வ் வங்கி  தான்.

இந்திய ரிசர்வ் வங்கி தான் கடனின் கடைசி தஞ்சமாக செயல்படுகிறது.

அன்னிய செலாவணி இருப்பை கட்டுப்படுத்துவது இந்திய ரிசர்வ் வங்கி .

பொது கடன்களை நிர்வகிப்பது இந்திய ரிசர்வ் வங்கி .

பணநோட்டு அச்சடிப்பு மற்றும் பணபுழக்கத்தை நிர்ணயிப்பது இந்திய ரிசர்வ் வங்கி .

தற்போதைய இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் Dr. D. சுப்பாராவ்.

 
Top