CHANDRAYAAN I

சந்திராயன் I நிலவுப்பயணத்திற்கான ஒரு கலன். இது நிலவுக்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் முதல் ஆளில்லா நுண்ணாய்வி ஆகும்.

2008 ஆம்  ஆண்டு அக்டோபர் மாதம் ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து ISRO- ஆல் விண்ணில் ஏவப்பட்டது.

இது 2009- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை செயல்பட்டது.

இதன் ஆய்வு வலம் வரும் மற்றும் தரையிறங்கு வகைகளை உள்ளடக்கியது.

இது ISRO வின் 5 பயன்சுமைகளை எடுத்துச்சென்றது

அமெரிக்காவின் நாச விண்வெளிமையம், ஐரோப்பிய விண்வெளிமையம் பல்கேரிய விண்வெளிமையம் இவற்றின் 6 பயன்சுமைகளை இலவசமாக எடுத்துச்சென்றது.

சந்திராயன் 312 நாட்கள் விண்ணில் செயல்பட்டது. அப்போது திட்டமிடப்பத்ட் இலக்குகளில் 95 சதவீதத்தை நிறைவு செய்தது.

சந்திராயனின் சாதனைகள்

நிலவின் மண்ணில் நீர் மூலக்கூறுகள் அதிகப் பரப்பில் பரவியிருப்பதைக் கண்டறிந்தது.

சந்திராயனின் கனிம வரை கருவி(Moon minerology Mapper) , நிலவு முற்காலத்தில் முற்றிலும் உருகிய நிலையிலிருந்ததை உறுதி செய்கிறது.

ஐரோப்பிய விண்வெளி மையத்தின் பயன்சுமை - சந்திராயன் 1 படமாக்கும் X-RAY நிறமாலைமானி 24க்கும் மேற்பட்ட வலிமை குன்றிய சூரிய ஒளிப்புயல்களை பதிவு செய்தது.

சந்திராயன் I-ல் பொருத்தப்பட்ட நிலா வரைப்பட ஒளிப்படக்கருவி அமெரிக்காவின் அப்போலோ 15, அப்போலோ 11 நிலவுக்கலன்கள் நிலவில் தரையிறங்கிய இடங்களை பதிவு செய்துள்ளது.

நிலவின் கனிம வளம் பற்றிய தகவல்கள் உயர்பகுதிறன்  நிறமாலைமானி  மூலம் பெறப்பட்டது.

நிலவின் லேசர் தொலைவறியும் கருவி நிலவின் துருவங்கள் மற்றும் முக்கியப் பகுதிகள் பற்றி தகவல் அளித்தது.

CIXS  X-கதிர் படக்கருவி, நிலவில் அலுமினியம், மெக்னீசியம் மற்றும் சிலிக்கான் இவற்றின் தடயங்களை பதிவு செய்துள்ளது.

பல்கேரியன் பயன்சுமையான கதிர்வீச்சுக் கண்காணிப்பு கருவி சந்திராயன்  ஏவப்பட்ட நாளிலேயே செயல்படுத்தப்பட்டு இறுதிநாள் வரை செயல்பட்டது.

75 நாள்களில் சந்திராயன்  புகைப்படக்கருவி 40,000க்கும் மேற்பட்ட படங்களை புவிக்கு அனுப்பியது.

நிலவின் மேடுபள்ளங்களை நிலா வரைப்பட ஒளிப்படக்கருவி பதிவு செய்தது.நிலப்பரப்பு அதிக பள்ளங்களை கொண்டது.

புவியின் முழு வடிவத்தையும் முதன்முறையாக பதிவு செய்து அனுப்பியது.

சந்திராயன் I  நிலவுப்பரப்பில் மனிதர்களின் உறைவிடமாக பயன்படும் பல குகைகளை கண்டறிந்தது.

 
Top