இயற் பெயர்: துரைராசு
ஊர்: மதுரை அடுத்துள்ள பெரியகுளம்
பெற்றோர்: சுப்புராயலு, சீதாலட்சுமி
காலம் : கி.பி. 1920-1998
சிறப்பு பெயர்கள்:
கவியரசு(குன்றக்குடி அடிகளார்)
தமிழ்நாட்டு வானம்பாடி(அறிஞர் அண்ணா)
இயற்றிய நூல்கள்:
தாலாட்டுப் பாடல்கள்
கவியரங்கில் முடியரசன்
முடியரசன் கவிதைகள்
பாடுங்குயில்
காவியப்பாவை
ஞாயிறும் திங்களும்
மனிதனைத் தேடுகிறேன்
பூங்கொடி(தமிழ் தேசிய காப்பியம், தமிழக அரசு பரிசு பெற்றது)
வீரகாவியம்
பணி:
காரைக்குடி மீனாட்சி சுந்தரம் அர் நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார்
சிறப்பு:
தமது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்றே உரைத்து, அவ்வாறே நிறைவேறச் செய்தவர். இவரின் கவிதைகளை சாகித்திய அகாடெமி இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிப்
பெயர்த்து வெளியிட்டுள்ளது. அறிஞர் அண்ணா இவரைத் "தமிழ்நாட்டு வானம்பாடி” எனப் போற்றினார். பறம்பு மலையில் நடந்த விழாவில் குன்றக்குடி அடிகளார் இவருக்கு
கவியரசு என்ற பட்டத்தை வழங்கினார். பூங்கொடி என்னும் காவியம் தமிழக அரசின் பரிசை பெற்றது