சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிந்து 8 மாதங்களாக தேர்வு முடிவுக்காக காத்திருந்த தேர்வு முடிவுகளை இன்று அதிகாரப்பூர்வ இணையத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 
உடற்கல்வி, தையல், ஓவியம், இசை ஆகிய சிறப்பாசிரியர் பணிகளில் 1,325 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் 23 -ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. 

சிறப்பாசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை www.trb.tn.nic.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 
தேர்வு எழுதியவர்கள் இணையதளத்தில் சென்று முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என்றும் இறுதி விடைகுறிப்பும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 
Top